கர்நாடகம் மீது மீண்டும் அவமதிப்பு வழக்கு: ஜெ. முடிவு
சென்னை:
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது மற்றொரு அவமதிப்பு வழக்கைத் தொடர தமிழக முதல்வர்ஜெயலலிதா முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 3ம் தேதி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவை கர்நாடகம் மதிக்காததைத் தொடர்ந்து அதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைநாங்கள் தொடர்ந்தோம். "உங்கள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?" என்று கேட்டு கர்நாடகமுதல்வர் கிருஷ்ணா உள்ளிட்ட ஐந்து பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு தினமும 0.8 டி.எம்.சி. நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 4ம் தேதிமீண்டும் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய உத்தரவையும் மதிக்க கர்நாடக அரசு தவறிவிட்டது. எனவே அந்த அரசுமீது தமிழக அரசு மீண்டும் அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர உள்ளது.
சட்டப்படி நடக்க மறுக்கும் கர்நாடக அரசின் செயலால் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கும், குறுவைசாகுபடி நடக்காததால் ஏற்பட்டுள்ள இழப்பிற்கும் அந்த அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரியும்வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.