"தலித்" என்ற வார்த்தையே தவறானது: சங்கராச்சாரியார்
காஞ்சிபுரம்:
தலித் என்ற வார்த்தையே தவறானது என காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்கூறியுள்ளார்.
அயோத்தி மற்றும் காசியில் சுற்றுப்பயணம் முடித்து விட்டு காஞ்சி திரும்பிய அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
தலித் என்ற வார்த்தையைவிட உயர்ந்த வார்த்தையான ஹரிஜனம் என்பதைப் பயன்படுத்தலாம். ஆனால், தலித்என்ற வார்த்தையை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் தான் அந்த வார்த்தைக்கேற்ப தாழ்த்தப்பட்ட மக்களைஅப்படியே வைத்துள்ளனர்.
தலித் என்ற வார்த்தைக்கு "ஒதுக்கப்பட்டவர்கள், கீழ்நிலையில் இருப்பவர்கள்" என்று அர்த்தம். அதனால் தான்மகாத்மா காந்தி, ஹரியின் ஜனங்கள் அதாவது ஆண்டவனின் பிள்ளைகள் என்ற அர்த்தம் வரும்படியான ஹரிஜன்என்ற வார்த்தையை உருவாக்கினார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் உயர்வான நோக்கத்துன் வளர வேண்டும் என்பதற்காக அவ்வாறு அழைத்தார்.
ஆனால் நமது அரசியல்வாதிகள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை வளர்க்கும் எண்ணத்தில் இல்லை. அவர்களைதாழ்ந்த நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். அதனால் தான் தலித் என்ற வார்த்தையைப் பயன்படுத்திவருகிறார்கள்.
இந்து மதத்தில் ஆதிவாசி என்ற ஒரு பிரிவே இல்லை. நகரவாசிகள், கிராம வாசிகள், வனவாசிகள் என்று தான்உள்ளன. இருந்தாலும் அனைவருமே இந்துக்கள் தான் என்றார் அவர்.
காஞ்சி சங்கராச்சாரியாரின் இந்த வாதம் பெரும் எதிர்ப்பைப் கிளப்பப் போவது நிச்சயம். தங்களை ஹரிஜனங்கள்என்று அழைப்பதை பல தலித் அமைப்புகளே கண்டித்துள்ளன. தங்களை தலித்கள் என்று தான் அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.