For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாராபுரம் எஸ்.சி., எஸ்.டி. அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைஅலுவலகத்தையும்,வாகனங்களையும் ஜப்தி செய்ய தாராபுரம் துணை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தாராபுரம் அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு இலவச வீடுகள் கட்டுவதற்காக கடந்த1986ம் ஆண்டு 7 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நில உரிமையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் நிலத்திற்குரிய மதிப்பு கொடுக்கப்பட்டதால், அதை எதிர்த்துஅவர்கள் தாராபுரம் துணை கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். ஆனால் அங்கு அது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் அவர்கள் அப்பீல் செய்யவே, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடாக ரூ.1லட்சத்து 37,000 இழப்பீடு கொடுக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்தத் தொகையை தராமல் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலத்துறை தாமதம் செய்ததால்வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சம் தொகையை உடனடியாக தர தாராபுரம் துணை கோர்ட் உத்தரவிட்டது.

இதையும் தராமல் தாழ்த்தப்பட்டோர் துறை காலதாமதம் செய்ததால், அலுவலகத்தையும், வாகனங்களையும் ஜப்திசெய்ய கோர்ட் உத்தரவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X