For Daily Alerts
Just In
வடலூரில் பயங்கரம்: வீட்டுக்குள் லாரி புகுந்து 3 பேர் பலி
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் 2 லாரிகள் மோதியதில், ஒரு லாரி சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்ததில்அங்கு தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கடலூர்-கும்பகோணம் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.
இரண்டு லாரிகளும் வடலூர் அருகே வந்து கொண்டிருந்த போது பயங்கரமாக மோதிக் கொண்டன.
இதில் சரக்கு லாரி சாலையோரம் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தது. இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூன்றுபேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து வடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Friday, October 11, 2002, 5:30 [IST]