இமாம் அலியை கொன்ற அதிகாரிக்கு கொலை மிரட்டல்
ராஜபாளையம்:
பெங்களூரில் இமாம் அலியைச் சுட்டுக் கொன்ற போலீஸ் குழுவில் இடம் பெற்றிருந்த மதுரை துணை போலீஸ்கமிஷனர் ஷகீல் அக்தருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தமிழில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இந்தகொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில், இமாம் அலியையும், அவரது சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற ஷகீல் அக்தர் நீண்ட நாளைக்குசந்தோஷமாக இருக்க முடியாது. விரைவில் அவர் கொல்லப்படுவார். குண்டு வைத்து அவர் கொல்லப்படுவார்என்று கூறப்பட்டுள்ளது.
கடிதத்தில் இமாம் அலியின் சகோதரர் அல்ஹாஜிதீன் என்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரம் தபால் நிலையத்தில் இந்தக் கடிதம் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.மம்சாபுரத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு இமாம் அலியுடன் தொடர்பு இருப்பதாக போலீஸாருக்கு ஏற்கனவேதகவல் உள்ளது.
இந் நிலையில் தற்போதைய கொலை மிரட்டல் கடிதத்தையடுத்து போலீஸார் தீவிர விசாரணையிலஇறங்கியுள்ளனர்.
ஐ.பி.எஸ். அதிகாரியான ஷகீல் அக்தருக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.