இன்று விஜயதசமி: ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு
சென்னை:
விஜயதசமியையொட்டி இன்று தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் கல்வியின் தெய்வமாகிய சரஸ்வதியைப் போற்றும் விதத்தில் விஜயதசமிகொண்டாடப்படுகிறது.
இந்த விஜயதசமி திருநாளின் போது ஏராளமான குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதும் பெற்றோரின் வழக்கம்.சரஸ்வதி பூஜையன்று பள்ளியில் சேர்ந்தால் தன் குழந்தை நன்றாகப் படிக்கும் என்பது ஒவ்வொரு பெற்றோரின்நம்பிக்கையும் கூட.
இதற்காக வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் நடைபெறும் அட்மிஷன் போது கூட தங்களுடைய குழந்தைகளைப்பள்ளியில் சேர்க்காமல் விஜயதசமியின் போது தான் சில பெற்றோர்கள் சேர்த்து விடுவார்கள்.
அநேகமாக அனைத்துப் பள்ளிகளிலும் கூட விஜயதசமி தினத்தன்று புதிதாக குழந்தைகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
அதன்படி விஜயதசமியான இன்று தமிழகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்தனர்.குழந்தைகளைப் பள்ளியில் சென்று சேர்ப்பதற்காகப் பெற்றோர்களும் பள்ளிகளில் வந்து குவிந்திருந்தனர்.
பல பள்ளிகளில் இன்று சிறப்பு அட்மிஷன் கூட நடைபெற்றது. இதற்காகப் பல நாட்களுக்கு முன்பிலிருந்தேஅந்தப் பள்ளிகள் விளம்பரம் செய்து வந்தன.