For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலம்: லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கிகளுடன் திரிந்த 2 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

உரிமம் இல்லாமல் துப்பாக்கிகள் வைத்திருந்த 2 பேரை சேலம் போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சீரிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது வயலில்சந்தேகத்திற்கிடமான 2 பேர் கையில் துப்பாக்கிகளுடன் அலைந்து கொண்டிருந்தனர்.

சந்தேகமடைந்த பழனிச்சாமி அவர்களை விசாரித்தபோது, முயல் பிடிக்க வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.யாராவது தடுத்தால் சுட்டு விடுவோம் என்றும் அவர்கள் பழனிச்சாமியை மிரட்டினர்.

இதையடுத்து குரல் கொடுத்த பழனிச்சாமி ஊர் மக்களை திரட்டி வந்து இருவரையும் பிடிக்க முயன்றார்.

அப்போது தனபால் என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார். அவரை போலீஸில் ஒப்படைத்தனர் பொதுமக்கள்.இன்னொரு நபர் தப்பி விட்டார். பின்னர் தனபால் கொடுத்த தகவலின் பேரில் சேகர் என்ற மற்றொரு நபரும்பிடிபட்டார்.

இருவரும் வைத்திருந்த துப்பாக்கிகள் உரிமம் இல்லாதவை என்றும் எதற்காக துப்பாக்கிகளுடன் வந்தார்கள்என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சமீப காலமாக சேலம் மாவட்டத்தில் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் துப்பாக்கிகளுடன்இருவர் பிடிபட்டுள்ளது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X