தமாகா பெயர், கொடி, சின்னம் முடக்கம்: தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை முடக்கி வைத்து மத்திய தேர்தல் கமிஷன்உத்தரவு பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி தமாகா இணைந்தது. அதற்கு முன்பாக தமாகாவின் பெயர்,கொடி, சின்னத்தை முடக்கி வைக்குமாறு கோரி அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் கமிஷனுக்கு கடிதம்எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தை பரிசீலித்த தேர்தல் கமிஷன் வாசன் கோரியபடி, தமாகா என்ற பெயரையும், அக்கட்சியின்கொடி, சைக்கிள் சின்னம் ஆகியவற்றை முடக்கி வைத்திருப்பதாக வாசனுக்கு தகவல் அனுப்பியுள்ளது.
இத்தகவலை காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் தமாகா செய்தித் தொடர்பாளருமான ஞானதேசிகன்தெரிவித்துள்ளார்.
தமாகா, காங்கிரஸில் இணைந்து விட்டாலும், குமாரதாஸ், ஹக்கீம் உள்ளிட்ட ஐந்து தமாகா எம்.எல்.ஏக்கள்சேரவில்லை என்பதும், அவர்களைத் தொடர்ந்து தமாகா எம்.எல்.ஏக்களாகவே செயல்பட சபாநாயகர் காளிமுத்துஅனுமதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தல் கமிஷன் தமாகாவின் அங்கீகாரத்தை முடக்கிவைக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் காளிமுத்து கூறியிருந்தார்.
அதன்படி இந்த ஐந்து எம்.எல்.ஏக்களையும் சட்டசபையில் சபாநாயகர் எங்கு அமர வைப்பார் என்பது ஓரிருநாட்களில் தெரிந்து விடும்.