தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்த தயார்: பா.ஜ.க.
சென்னை:
சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் தீண்டாமைப் பழக்கத்தை அடியோடு ஒழிக்க திராவிட இயக்கங்களுடன்சேர்ந்து செயல்படத் தயார் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் அகில இந்திய செயலாளர் இல. கணேசன்தெரிவித்துள்ளார்.
விஜயதசமி தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து மதத்தில் தீண்டாமைப் பழக்கம் புரையோடிக் காணப்படுகிறது. இதை ஒடுக்க திராவிட இயக்கங்கள், கட்சிகள்எடுத்த நடவடிக்கைகள் பெருமளவில் பலனளிக்காமல் போய் விட்டன.
தீண்டாமையை ஒழிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று திராவிட இயக்கங்களுடன் கலந்துபேசி, ஆலோசித்து கூட்டாக செயல்பட பா.ஜ.க. தயாராக உள்ளது. இதுதொடர்பாக திராவிட இயக்கத் தலைவர்கள்திட்டமிட வேண்டும்.
இந்து மதத்தில் தங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி வேறு மதத்திற்கு மாறிவிடுவதுகோழைத்தனமானது. மாறாக உள்ளே இருந்து கொண்டே போராட வேண்டும். அப்படிப் போராடவிரும்புபவர்களுக்கு நாங்கள் உதவத் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார் கணேசன்.