காவிரி: கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை தேவை- மாஜி அதிமுக அமைச்சர்கள்
சென்னை:
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு எதிராக உடனடியாக சட்ட ரீதியிலானநடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர்களான வி.வி.சுவாமிநாதனும் ராஜா முகமதுவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த இவர்கள் இருவரும் இன்று வெளியிட்டுள்ளஒரு கூட்டறிக்கையில்,
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க கர்நாடக அரசு தவறி விட்டது.
எனவே கர்நாடக அரசு மீது அரசியல் சட்டம் 246, 256, 257 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதமர் வாஜ்பாய்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி தமிழகத்திற்கு உடனடியாகக் காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும்என்று கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும்.
காவிரி பிரச்சனை காரணமாக கர்நாடகத்தில் தமிழ் சினிமா படங்களையும், தமிழ் டி.வி. சேனல்களையும்இருட்டடிப்பு செய்திருப்பது அடிப்படை மனித உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இதை வன்மையாகக்கண்டிக்கிறோம் என்று அவ்வறிக்கையில் சுவாமிநாதனும் ராஜா முகமதுவும் கூறியுள்ளனர்.