கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைக்குமா?- நாளை தீர்ப்பு
பெங்களூர்:
பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணியின் ஜாமீன்மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்கள் "சப்ளை" செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார் கொளத்தூர் மணி. அவர் மீது வேறு பல வழக்குகளும் உள்ளன.
இந்நிலையில் கொளத்தூர் மணியையும் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர்மகாதேவசாமியையும் தன்னிடம் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்று கர்நாடக முன்னாள் அமைச்சர்நாகப்பாவைக் கடத்தியுள்ள வீரப்பன் கேசட் மூலம் கோரியிருந்தான்.
இந்நிலையில் கொளத்தூர் மணி ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த 10ம் தேதி இம்மனுவை விசாரித்த நீதிபதி வி.ஜி. சபாகித் இவ்விசாரணையை வரும் 17ம் தேதிக்குஒத்திவைத்தார்.
அதன்படி நாளை இந்த ஜாமீன் மீது நாளை மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. நாளையே இம்மனு மீதானதீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
கொளத்தூர் மணியைத் தூதராக அனுப்ப கர்நாடக அரசும் விரும்புகிறது என்பதால், அவருக்கு ஜாமீன்வழங்குவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்று தெரிகிறது.
இதனால் கொளத்தூர் மணிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->