For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

""நான் தனியாக தூது வரலாமா?"": வானொலி மூலம் வீரப்பனிடம் கேட்டார் மகாதேவசாமி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

"நான் தனியாக தூது வந்தால் உங்களுக்குச் சம்மதமா?" என்று கேட்டு வீரப்பனுக்கு வானொலி மூலம் இன்றுதகவல் அனுப்பினார் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னச்சி மகாதேவசாமி.

பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரியார் திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலைசெய்து, அவருடன் மகாதேவசாமியையும் தூது அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் கேசட் மூலம் கேட்டிருந்தான்.

ஆனால் கொளத்தூர் மணியை தூது அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதால், மகாதேவசாமியை மட்டும்தூதராக காட்டுக்குள் அனுப்ப கர்நாடக அரசு முடிவு செய்தது.

இருந்தாலும் இதற்கு வீரப்பன் சம்மதிக்க வேண்டுமே என்று எண்ணிய அரசு, மகாதேவசாமியை வானொலி மூலம்அவனுக்குத் தகவல் அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்படி இன்று காலை மகாதேவசாமி வானொலியில் (வீரப்பனிடம் பேசுவது போல்) பேசினார். அவர்பேசுகையில்,

கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைக்க கால தாமதம் ஆகலாம் என்று தெரிகிறது. மேலும் அவரைத் தூதராகஅனுப்புவதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன.

எனவே கொளத்தூர் மணி காட்டுக்குள் தூதராக வருவது என்பது மிகவும் சிரமமான விஷயம்.

அதனால் நான் மட்டும் தனியாக தூதராக வந்தால் அதில் உங்களுக்குச் சம்மதமா? இது குறித்து நீங்கள்உடனடியாகப் பதிலளித்தால் நான் எந்த நேரத்திலும் காட்டுக்குள் வரத் தயாராக உள்ளேன்.

மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் நாகப்பாவை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைத்தவுடன் அவரையும் அழைத்துக் கொண்டு நான் நிச்சயம் காட்டுக்குள்வருவேன். அப்போது உங்களுடைய நிபந்தனைகள் குறித்துப் பேசுவோம் என்று வானொலியில் பேசினார்மகாதேவசாமி.

மகாதேவசாமி வானொலி மூலம் பேசிய இந்த விவரங்களை கர்நாடக மாநில டி.ஜி.பி. மடியால் இன்று பிற்பகல்நிருபர்களிடம் தெரிவித்தார்.

மகாதேவசாமியின் வானொலிப் பேச்சைத் தொடர்ந்து வீரப்பனிடமிருந்து மீண்டும் ஒரு கேசட் விரைவில் வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X