5 அரியலூர் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த முடிவு
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள கோவிந்தபுரம் என்ற கிராமத்தில் 5 ஆலயங்களுக்கு தமிழ் முறையில் குடமுழுக்கு விழாநடத்த கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோவிந்தபுரம் கிராமத்தில் பழமையான விநாயகர், மாரியம்மன், முருகன் உள்ளிட்ட ஐந்து ஆலயங்கள் உள்ளன.
மிகவும் சிதிலமடைந்து, பாழடைந்த நிலையில் இருந்த இந்த ஐந்து ஆலயங்களையும் புணரமைத்து, குடழுக்குசெய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்தப் பணிகள் தற்போது முடிவடைந்து விட்டன.
நாளை குடழுக்கு விழா தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை தமிழில் குடமுழுக்கு நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த சைவ சிவாச்சாரியார் ஒருவர் இதை நடத்தி வைக்கவுள்ளார். இதற்கான அனைத்துஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டன.
சமீபத்தில் கரூர் அருகே உள்ள சிவன் கோவிலிலும் இதுபோலவே தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டதும், அதற்கு பிராமணர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்ததும், ஆனால் அதையும் மீறிதமிழிலேயே குடமுழுக்குசிறப்பாக நடந்ததும் தெரிந்ததே!
தமிழில் குடமுழுக்கு நடைபெற்றதை திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் வரவேற்றிருந்த நிலையில் காஞ்சிசங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் உள்ளிட்ட சிலர் அதை எதிர்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.