For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. படம் எரிப்பு வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் தாமரைக்கனி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை எரித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் எழும்பூர் கோர்ட்டில்முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி ஆஜரானார்.

கடந்த 2001ம் ஆண்டு தாமரைக்கனி சென்னையில் உள்ள தனது எம்.எல்.ஏ. அறையை காலி செய்தார். அப்போதுபழைய பொருட்களை வெளியில் போட்டு எரித்தார்.

அதில் ஜெயலலிதாவின் புகைப்படமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வரின் படத்தை எரித்ததாகதாமரைக்கனி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் பலமுறை கோர்ட் உத்தரவிட்டும் தாமரைக்கனி ஆஜராகாவில்லை.

இந்நிலையில் எழும்பூர் கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் தாமரைக்கனி.

அப்போது எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் எழும்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார் தாமரைக்கனி.

இதையடுத்து பிடிவாரண்ட்டை ரத்து செய்து, அவருக்கு ஜாமீனும் வழங்கினார் நீதிபதி சாம்பசிவம். பின்னர்இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X