தமிழ் சேனல்கள் "கட்": கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
பெங்களூர்:
கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்கள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
"கன்னட யுவகர வேதிகே" என்ற அமைப்பைச் சேர்ந்த கன்னட வெறியர்கள் தான் கேபிள் ஆபரேட்டர்களை மிரட்டிதமிழ் டி.வி. சேனல்களை நிறுத்தும்படி கூறியுள்ளனர்.
கடந்த 5ம் தேதியிலிருந்தே பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் டி.வி. சேனல்கள்நிறுத்தப்பட்டு விட்டன.
இவ்வாறு தமிழ் சேனல்கள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து பெங்களூர் - ஜே.ஜே. நகரைச் சேர்ந்த ஏ.பி. செல்வராஜ்என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர். பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில்,
கர்நாடகத்தில் தமிழ் டி.வி. சேனல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது மனித உரிமையை மீறும் செயலாகும். மேலும்இது சட்ட விரோதமானதும் கூட.
இது குறித்து கர்நாடக போலீசாரிடம் புகார் கூறியும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, வரும்24ம் தேதி வரை தமிழ் சேனல்களை நிறுத்திவைக்க வேண்டும் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனரே கேபிள்ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் ஒட்டு மொத்த அரசு எந்திரங்களுமே தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராக விதிமுறைகளை மீறியுள்ளன.
எனவே தமிழ் டி.வி. சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
கர்நாடகத்தில் உள்ள தமிழ் சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.