"தமிழ் படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்"
சென்னை:
கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக திரைப்படவர்த்தக சங்கத்திற்கு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அனுப்பியுள்ளகடிதத்தில்,
இனம், மொழிக்கு அப்பாற்பட்டது கலை. எனவே கர்நாடகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடுவதற்குத்தேவையான நடவடிக்கையை எடுக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முன்வர வேண்டும்.
வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
அவற்றை கர்நாடகத்தில் திரையிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தென்னிந்திய திரைப்படவர்த்தக சபை கேட்டுக் கொண்டுள்ளது.
இதேபோன்ற ஒரு கோரிக்கை கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்குஅனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.