அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தமாகாவினர் தான்: காளிமுத்து
சென்னை:
அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான 5 பேரும் தமிழக சட்டசபையில் தமாகா எம்.எல்.ஏக்களாகவேகருதப்படுவார்கள் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
சென்னையில் இது தொடர்பாக நிருபர்களிடம் காளிமுத்து பேசுகையில்,
தமாகாவின் பெயரையோ, கொடியையோ, சின்னத்தையோ தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளதால், வேறுயாரும் அதைப் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டு சட்டசபையில் அக்கட்சியின் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திடமிருந்து இதுவரை எந்தவிதமான கடிதமும் எனக்கு வரவில்லை.
அப்படி ஒரு கடிதம் வந்தால் தான் குறிப்பிட்ட அந்த ஐந்து எம்.எல்.ஏக்கள் குறித்து நான் நடவடிக்கை எடுக்கமுடியும்.
அப்படி ஒரு கடிதம் வந்த பின்னர் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு என்னுடைய முடிவைத்தெரிவிப்பேன்.
அதுவரை அவர்கள் ஐந்து பேருமே தமாகா எம்.எல்.ஏக்களாகவே வரும் கூட்டத் தொடரின் போதுசெயல்படுவார்கள் என்றார் காளிமுத்து.
டாக்டர் குமாரதாஸ், ஈஸ்வரன், ஹக்கீம், மணி நாடார் மற்றும் தமிழரசன் ஆகிய ஐந்து எம்.எல்.ஏக்களும் தான்காங்கிரசுடன் தமாகா இணைந்ததை எதிர்த்து, தாங்கள் இன்னும் தமாகாவிலேயே இருப்பதாகத்தெரிவித்துள்ளனர்.