தேவர் குருபூஜையில் ஜெ. பங்கேற்பு?
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர்ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் ஆகிய இரண்டும் குருபூஜை தினமாகஅக்டோபர் 30ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளை தேவர் சமுதாயத்தினர் மிகப் பெரும் விழாவாக கொண்டாடுவார்கள். கமுதி அருகே உள்ள தேவர்சமாதி உள்ள பசும்பொன் கிராமத்தில் அன்றைய தினம் தேவர் சமுதாயத்தினர் கூடி, பொங்கல் வைத்து, மொட்டைபோட்டு தேவருக்கு பூஜை செய்வார்கள். கிட்டத்தட்ட கோவில் விழா போலவே இது நடைபெறும்.
குருபூஜை தினத்தன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் சமாதிக்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்துவார்கள்.
இந்த ஆண்டும் தேவர் குருபூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
வழக்கம்போலவே பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில ஜெயலலிதாவும் தேவர் குருபூஜையில் கலந்து கொண்டு தேவருக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்என்ற கூறப்படுகிறது.
இதையடுத்த பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டுவரக் கூடாது என்று குருபூஜைக்காக வருவோருக்குஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.