For Quick Alerts
For Daily Alerts
Just In
கர்நாடகத்திலிருந்து வந்த கள்ளச் சாராயம் பறிமுதல்
சென்னை:
கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குக் கடத்தி வரப்பட்ட 1200 பாக்கெட் கள்ளச் சாராயத்தை போலீஸார்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை-புதுவண்ணாரப்பேட்டை அருகே போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 100 மில்லி அளவு கொண்ட 1200 சாராயபாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதுதவிர இரண்டு கேன்களிலும் சாராயம் இருந்தது.
இந்த சாராயம் கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுப்ரமணிஎன்பவரை போலீஸார் கைது செய்தனர்.
Comments
Story first published: Friday, October 25, 2002, 5:30 [IST]