வைகோவுடன் துரைமுருகன் திடீர் சந்திப்பு
வேலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை திமுக முக்கியத் தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் வேலூர் சிறையில் சென்று சந்தித்துப்பேசினார்.
துரைமுருகனுடன் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகளும் வேலூர் மத்திய சிறைக்கு சென்றனர்.
பின்னர் வெளியில் வந்த துரைமுருகனிடம் செய்தியாளர்கள் இந்த திடீர் சந்திப்பு குறித்துக் கேட்கையில்,
இதில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இல்லை. எங்கள் கட்சியின் மத்திய அமைச்சர் முரசொலி மாறனை மதிமுகமத்திய அமைச்சர்கள் மருத்துவமனையில் வந்து சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்கள்.
எனவே, மரியாதை நிமித்தமாக வைகோவை சந்திக்குமாறு என்னை தலைவர் கருணாநிதி அனுப்பி வைத்தார்என்றார் அவர்.
இருப்பினும் இந்த சந்திப்பில் முக்கியமான சில பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது.
திமுகவைப் போலவே மதிமுகவும் பா.ஜ.க. மீது கோபத்தில் உள்ளது. வைகோ கைது விவகாரத்தில் மத்திய அரசுஅலட்டிக் கொள்ளவே இல்லை என்பதால் எரிச்சலில் உள்ள மதிமுகவுடன் திமுக நெருங்குவதையே இச் சந்திப்புகாட்டுகிறது.