For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அரசுக்கு ஏற்பட்டுள்ளது மதி பற்றாக்குறை தான்": கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது நிதிப் பற்றாக்குறை அல்ல மதிப் பற்றாக்குறை தான் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறினார்.

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது "எஸ்மா" எனப்படும் அத்தியாவசிய பணிப்பராமரிப்பு சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 4,000 பேருக்கு"மெமோ"வும் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதைக் கடுமையகக் கண்டித்த கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறுகையில்,

லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் காட்டுமிராண்டி செயல்களில்ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளது.

அரசுக்குத் தற்போது ஏற்பட்டுள்ளது நிதிப் பற்றாக்குறை அல்ல, மதிப் பற்றாக்குறை தான்.

எந்தவிதமான நிபந்தனையும் இன்றி அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய நியாயமானகோரிக்கைகளைக் காது கொடுத்து அரசு கேட்க வேண்டும்.

அவ்வாறு பேசித் தான் அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இல்லையென்றால் வேதனையும்,சோதனைகளும் தான் ஏற்படும்.

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்தக் காட்டுமிராண்டித்தனங்களை திமுக சார்பில் நான் கண்டிக்கிறேன்.

இது போன்ற அடக்குமுறைச் செயல்களை திமுக போன்ற கட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மாஉட்கார்ந்து கொண்டிருக்காது என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X