For Daily Alerts
Just In
வைகோவின் சிறைவாசம் மீண்டும் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நீதிமன்றக் காவல் வரும் நவம்பர் 22ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் இருந்து இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட வைகோ நீதிபதி ராஜேந்திரன் முன்ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது பேசிய அரசு வழக்கறிஞர், வைகோவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. வைகோ மீதான போலீஸ் விசாரணை முடியும்கட்டத்தில் உள்ளது. இப்போது அவரை விடுவிததால் விசாரணைகள் பாதிக்கப்படும் என்றார்.
இதையடுத்து அவரை அடுத்த மாதம் 22ம் தேதி வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கடந்த ஜூலை 11ம்தேதி வைகோ கைது செய்யப்பட்டார்.
Comments
Story first published: Monday, October 28, 2002, 5:30 [IST]