தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 1,100 கோடி பாக்கி!!
சென்னை:
மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 1,100 கோடி பாக்கி தர வேண்டியுள்ளது.
இது குறித்து நிதியமைச்சர் பொன்னையன் சட்டமன்றத்தில் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து மத்திய அரசு வசூலித்த வரியில் இருந்து ரூ. 1,100 கோடியை நமக்கு தர வேண்டியுள்ளது.அதை இன்னும் தரவில்லை. இந்தப் பணம் வந்து சேர்ந்தால் தமிழகத்தின் பல்வேறு நிதிச் சிக்கல்கள் தீரும்.
மேலும், 11வது திட்டக் காலப் பணிகளுக்கு என தமிழகத்திற்கு ரூ. 21,601 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 11வது நிதிக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தை வளர்ந்த மாநிலங்களின் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இதனால் வரி வருவாயின் பங்கைக்குறைத்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2,941 கோடி இழப்பு ஏற்படுகிறது.
இதைச் சரிக்கட்ட ரூ. 3,000 கோடி வழங்குமாறு சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதாவலியுறுத்தினார்.
தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ரூ. 1,100 கோடியைப் பெற்றுத் தர தேசிய ஜனநாயகக் கூட்டணியில்உள்ள திமுகவும் பா.ம.கவும் முயற்சிக்க வேண்டும் என்றார் பொன்னையன்.