For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெங்காய வெடி தயாரித்தவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

ஆத்தூர் வெங்காய வெடி விபத்தின் கோரம் இன்னும் மறையாத நிலையில் சேலத்தில் ரகசியமாக வெங்காயவெடிகளைத் தயாரித்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

நாராயணபுரம் என்ற பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மொபட்டில் வந்தஇரண்டு பேரை தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையைச் சோதனையிட்ட போது அதில் ஏராளமான வெங்காய வெடிகள்இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கலாநிதி, சிவக்குமார் என்ற சிவா அவர்களது பெயர் என்று தெரிந்தது.அம்மாசி என்பவரிடமிருந்து ரூ.5,000 கொடுத்து தீபாவளி விற்பனைக்காக இவற்றை வாங்கிச் செல்வதாகஅவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அம்மாசியை போலீஸார் பிடித்தனர். ரகசியமாக வெங்காய வெடிகளை அவர் தயாரித்து வந்ததுவிசாரணையில் தெரிய வந்தது.

அவரைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X