For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொளத்தூர் மணியின் ஜாமீன் மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

மைசூர்:

பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணியின் ஜாமீன் மனு மைசூர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திக் கொண்டு போய் 60 நாட்களுக்குமேல் ஆகிவிட்டன.

இந்நிலையில் கொளத்தூர் மணியையும் கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சிமகாதேவசாமியையும் தூதர்களாக காட்டுக்குள் அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் கேசட் அனுப்பியிருந்தான்.

ஆனால் கொளத்தூர் மணி சிறையில் இருப்பதால் அவரைத் தூதராக அனுப்புவதில் சிக்கல் உள்ளதாக வானொலிமூலம் வீரப்பனுக்குத் தகவல் அனுப்பப்பட்டது.

மேலும் கொளத்தூர் மணிக்கு ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவரைத் தூதராக அனுப்புவது குறித்துமுடிவெடுக்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்தது.

மைசூர் நீதிமன்றத்தில் மட்டும் கொளத்தூர் மணி மீது இரண்டு வழக்குகள் உள்ளன. அதில் ஒன்றில் சமீபத்தில்அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.

இந்நிலையில் மற்றொரு வழக்கில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. ஆனால் அம்மனுதள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வழக்கில் சாம்ராஜ் நகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து விட்டுத் தான் இங்கு வரவேண்டும். நேரடியாக செசன்ஸ் கோர்ட்டுக்கு வந்ததால் இம்மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி கூறினார்.

இதையடுத்து நாகப்பாவை மீட்க காட்டுக்குள் தூதரை அனுப்புவது குறித்து மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.வீரப்பனிடமிருந்து எந்தவிதமான தகவலும் இல்லை.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X