மதமாற்ற தடை சட்டம்: இன்று சட்டசபையில் விவாதம்
சென்னை:
கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் மீது தமிழக சட்டசபையில் விவாதம் இன்று நடைபெறுகிறது.
கட்டாய மதமாற்றத் தடுப்பு சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது இன்றுவிவாதம் நடக்கிறது. இந்த மசோதாவை அவை முன்னவர் பொன்னையன் முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில்தாக்கல் செய்தார்.
தாழ்த்தப்பட்ட, வறுமையில் வாடும் மக்களை தவறான வழியில் மதம் மாற்றுவதைத் தடுக்கவே இந்த சட்டம்கொண்டுவரப்படுவதாக அரசு கூறியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் மதமாற்ற அச்ச உணர்வு இல்லாமலும் இதுபோன்ற முயற்சிகளை முளையிலேயே கிள்ளிஎறியும் வகையிலும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்படி, ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு கட்டாயப்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி, பணஆசை காட்டி மாற்றுவது குற்றச் செயலாகும். இதுபோன்ற செயலில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு 3 ஆண்டுசிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.
18 வயதுக்குக் கீழ்உள்ளோர், பெண்கள் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை மதம் மாற்றினால்,மதம் மாற்றம் செய்தவர்களுக்கு 4 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராதம் ரூ.1 லட்சம்விதிக்கப்படும் என்று சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சட்ட மசோதா மீதான விவாதம் இன்று சட்டசபையில் நடக்கிறது.
திமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தச் சட்ட மசோதாவை துவக்க நிலையிலேயே எதிர்த்துள்ளன.பா.ஜ.க. மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.