For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ஆளுநருக்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இந்து தர்மத்தை கடைப்பிடித்து பெண்கள் நடக்காத காரணத்தால் தான் பெண் சிசுக் கொலைகள் நடக்கின்றனஎன்று தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் கூறியுள்ளதற்கு அகில இந்திய பெண்கள் அமைப்பு கண்டனம்தெரிவித்துள்ளது.

ஆளுநர் ராம்மோகன் ராவ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்து தர்மத்தை நமது நாட்டுப் பெண்கள் சரியாகக்கடைப்பிடிக்காத காரணத்தால் தான் பெண் சிசுக் கொலை போன்ற பாதகங்கள் அதிகரித்து விட்டது என்றும்எனவே பெண்கள் இந்து தர்மப்படி நடக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு அகில இந்திய பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் 75-வது மாநாட்டில்பேசியவர்கள் ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் சுதா சுந்தரராமன் மற்றும் பொதுச் செயலாளர் வாசுகி ஆகியோர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்து தர்மப்படி நடக்காத காரணத்தால் தான் பெண் சிசுக் கொலை நடப்பதாக கூறுவது மடத்தனம்.

மூடநம்பிக்கையே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்று இருக்கும் போது ஆளுநர் இவ்வாறுகூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X