For Daily Alerts
Just In
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல்
திருவாவடுதுறை:
திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
திருவாவடுதுறை தலைமை ஆதீனத்தை கொல்ல முயற்சி செய்ததாக இளைய ஆதீனம் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
தற்போது மேலும் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் உங்களை விரைவில் வெடிகுண்டு வைத்துசிதைக்கப் போகிறோம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து கடந்த 29ம் தேதி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆதீன துணை மேலாளர் ராமச்சந்திரன் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments
Story first published: Sunday, November 3, 2002, 5:30 [IST]