ரஜினி மீது பாமக மீண்டும் சாடல்
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த், நதிகள் இணைப்பு குறித்து உண்மையான ஆர்வத்துடன் குரல் கொடுக்கவில்லை என்றுபாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
சென்னையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைநடந்தது. இதில் ஜி.கே.மணி, ரயில்வேத்துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உண்ணாவிரதம் இருந்த ரஜினி காந்த் பின்னர் ஆளுநரிடம் மனு கொடுக்கப் போனார். அங்கு அவரிடம் சிலர்,நதிகள் இணைப்பு 300 வருடமானாலும் நிறைவேறாது என்று கூறியுள்ளனர்.
அதைத் தெரிந்து கொண்ட பின்னரே, நதிகள் இணைப்பு குறித்து மக்கள் இயக்கம் நடத்தப் போவதாகவும், ரூ. 1கோடி கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
உண்மையிலேயே அவருக்கு நதிகள் இணைப்பில் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. மனம் வந்து அவர் குரல்கொடுப்பது போலவும் தெரியவில்லை.
தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யாரோ சொன்னார்கள் என்பதற்காக இந்த பிரச்சினையை கையில்எடுத்துள்ளார். பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இல்லை என்றார் மணி.