சேலத்தில் பன்றிகளை சுட்டுக் கொல்ல உத்தரவு
சேலம்:
சேலம் நகரில் டெங்குக் காய்ச்சல் பரவி வருவதால் பன்றிகளை சுட்டுக் கொல்ல மாநகராட்சி நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் சமீபத்தில் விஷக் காய்ச்சல் பரவி சிலர் உயிரிழந்தனர். இந்த பரபரப்புஅடங்குவதற்குள் சேலம் நகரில் டெங்குக் காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை 6 பேர் டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து மாநகராட்சி சில தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பன்றிகளால்தான் டெங்கு மற்றும் மூளைக்காய்ச்சல் பரவுவதால், பன்றிகளை வளர்ப்போர் உடனடியாக அவற்றை தங்களது இருப்பிடங்களிலிருந்துஅப்புறப்படுத்தமாறு மாநகராட்சி எச்சரித்துள்ளது.
வரும் 15ம் தேதிக்குள் பன்றிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதற்குப் பிறகு தெருவில்திரியும் பன்றிகள் சுட்டுக் கொல்லப்படும் என்று மாநிகராட்சி கூறியுள்ளது.
சேலம் பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அளவுக்குஅதிகமாகி விட்டது.
-->