For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: செய்தி கேட்ட உறவினரும் சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் செய்தியை அறிந்த உறவினர்அடுத்த நொடியே மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

சென்னை வில்லிவாக்கம் கீழ மாட வீதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம். அதிக அளவில கடன் வாங்கியிருந்ததாகத்தெரிகிறது. அதைத் திருப்பிக் கட்ட முடியாமல் திணறி வந்தார்.

இந் நிலையில் கடந்த 3 நாட்களாக இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து வீட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது, உள்ளே அழுகிய நிலையில் ஆறுமுகம்,அவரது மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேரும் பிணமாக கிடந்தனர்.

அந்த வீட்டில் ஒரு கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆறுமுகம் எழுதியிருந்த அந்தக் கடிதத்தில், எங்களது உடல்களைஉறவினர் தெய்வநாயகத்திடம் ஒப்படைத்து விடுமாறு போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து போலீஸார் தெய்வநாயகத்தின் வீட்டுக்குச் சென்று ஆறுமுகம் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்ட தகவலைத் தெரிவித்தனர்.

இந்தச் செய்தியைக் கேட்ட கதறி அழுதார். ஆறுமுகம் எழுதிய கடிதத்தை வாங்கிப் படித்தவர் துக்கத்தில் சுயநினைவு இழந்து மயங்கி விழுந்தார்.

போலீசாரும் அவரது குடும்பத்தினரும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X