For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.க்கு அனுப்பட்ட மர்ம பார்சலில் வெற்று பேப்பர்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று வந்த ஒரு மர்ம பார்சலைப் போலீசார் சோதனையிட்டதில், அதில்வெறும் பேப்பர்கள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆப்கான் மீது அமெரிக்கா கடந்த 5 வாரங்களாக தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, அந்நாட்டுத் தீவிரவாதிகள்உலகம் முழுவதும் ஆந்த்ராக்ஸ் என்னும் விஷக்கிருமியைப் பரப்பி வருகின்றனர்.

இந்தியாவிலும் பல முக்கிய தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல்களில், ஆந்த்ராக்ஸ் கிருமி இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில் இதுபோன்ற மர்ம பார்சல்கள் வெற்று வதந்திகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லியில் இருந்து ஒரு மர்ம பார்சல் வந்தது. இதில்ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் முதலில் அதற்குள் வெடிகுண்டு எதுவும் இருக்கிறதாஎன்று சோதனை செய்தனர்.

பிறகு இரசாயனச் சோதனைக்காக, அந்தப் பார்சல் சென்னை கால்நடைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கு நடந்த சோதனையில், அந்தப் பார்சலில் வெறும் பேப்பர் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பவுடர்வடிவில் அதற்குள் எந்தப் பொருளும் இல்லாதததால், வதந்தியை ஏற்படுத்துவதற்காக யாரோ சில விஷமிகள்அதை அனுப்பியுள்ளனர் என்று நினைத்து போலீசார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இருப்பினும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வார துவக்கத்தில் தமிழக விடுதலைப் படையினர் அமைப்பிடமிருந்து இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X