தமிழகத்தில் 15 மாதிரி ரயில் நிலையங்கள்
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் 15 மாதிரி ரயில் நிலையங்களை அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக ரயில்வே இணைஅமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. காஞ்சிசங்கராச்சாரியார்களான ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீஜெயேந்திரர் ரயில் நிலையத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பண்டாரு தத்தாத்ரேயா பேசுகையில்,
தமிழகத்தில் 15 மாதிரி ரயில் நிலையங்களை அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
தென்னகத்தின் புனித இடங்களான திருப்பதி, குருவாயூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும்வகையில் புதிய ரயில் விடப்படும்.
அதேபோல, சுற்றுலா ஸ்தலங்களை இணைக்கும் வகையிலும் புதிய ரயில் விடப்படும் என்றார்.
மற்றொரு ரயில்வே இணை அமைச்சரான ஏ.கே. மூர்த்தி பேசுகையில், காஞ்சிபுரத்திற்கும், சென்னை கடற்கரைக்கும்இடையே மேலும் ஒரு மின்சார ரயில் விடப்படும். அடுத்த மாதம் முதல் இந்த ரயில் ஓடும் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் எம்.எல்.ஏவுமானஎஸ்.எஸ். திருநாவுக்கரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-->