சிறைக்குள் 100 நாட்களில் 200 புத்தகங்கள் படித்த வைகோ
வேலூர்:
கைதாகி 100 நாட்களுக்கு மேலாகியும் மதிமுக பொதுச் செயலாளரான வைகோ அதே சுறுசுறுப்புடன் வேலூர்சிறைக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிவகாசி தொகுதியின் எம்.பியுமான வைகோவைச் சந்தித்து விட்டு வந்த அவருடைய கட்சிப் பிரமுகர்கள்கூறியதாவது:
சிறையில் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகிறார். ஆனால் அவர் அடைக்கப்பட்டுள்ள தனியறையை காலை 6மணிக்குத் தான் சிறை அதிகாரிகள் திறந்து விடுவார்கள்.
அதனால் அதுவரை அவர் புத்தகங்களை எடுத்துப் படித்துக் கொண்டே இருப்பார்.
பின்னர் 6 மணிக்குக் கதவு திறக்கப்பட்டதும் மளமளவென்று சிறைக்குள்ளேயே "வாக்கிங்" கிளம்பி விடுகிறார்.
காலைக் கடன்களை முடித்த பின்னர் 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பார்வையாளர்களைச் சந்திக்கிறார்.தொடர்ந்து பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மீண்டும் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் பேசுகிறார்.
தன்னைச் சந்திக்க வருபவர்கள் எதைக் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் வைகோ, புத்தகங்களை மட்டுமேகொடுங்கள் என்று கேட்டுக் கேட்டு வாங்கிக் கொள்வார்.
இதையடுத்து வளாகத்திற்குள்ளேயே மற்ற கைதிகளுடன் சேர்ந்து கொண்டு வாலிபால் விளாைடுகிறார்.
விளையாட்டை முடித்து விட்டு வைகோ தன்னுடைய அறைக்குத் திரும்ப, சரியாக மாலை 6 மணிக்கு அந்த அறைபூட்டப்படுகிறது.
தன்னைச் சந்திக்க வருபவர்களிடமிருந்து மட்டும் இதுவரை அவர் சுமார் 400 புத்தகங்களைப் பெற்றுள்ளார்.அதைத் தன்னுடைய அறையிலேயே வரிசையாக அடுக்கி வைத்துள்ளார்.
இரவு உணவை முடித்த பின்னர் தூங்கும் வரை படித்துக் கொண்டே இருப்பார் வைகோ. கிட்டத்தட்ட புத்தகப்புழுவாகவே மாறி விடுகிறார்.
படிப்பு... படிப்பு... படிப்பு... இது மட்டுமே தன்னுடைய முக்கியப் பொழுதுபோக்காகக் கொண்டுள்ள அவர் இந்த100 நாட்களில் சுமார் 200 புத்தகங்களைப் படித்துள்ளார் என்று மதிமுக பிரமுகர்கள் கூறினர்.
பொறுமையாகப் புத்தகங்கள் படிக்கும் வழக்கம் உள்ளவர்கள் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களுக்குக்கவலையே இல்லை என்பதை வைகோ நிரூபித்து வருகிறார்.
-->