For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா பேனர் கிழிப்பு: சென்னையில் அதிமுக-காங். தொண்டர்கள் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேனரை சில அதிமுக தொண்டர்கள் கிழித்ததைத் தொடர்ந்து ஏற்பட்டமோதல் தொடர்பாக சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் உள்ளிட்ட 7 காங்கிரஸ் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பார்வையிட்டார்.ஜெயலலிதாவின் பின்னாடியே நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்களும் சென்றனர்.

துறைமுகம் தொகுதி கிளைவ் பாட்டரியைத் தாண்டி முதல்வர் சென்றதும், அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த அதிமுக தொண்டர்கள் சிலர் அங்கிருந்த சோனியா படம் வரையப்பட்ட பேனரைக் கிழித்துஎறிந்தனர்.

இதைக் கண்டதும் பயங்கர கோபமடைந்த அப்பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் ஜெயலலிதாவின் பின்னால் சென்றுகொண்டிருந்த அதிமுக தொண்டர்களை வழிமறித்து இது குறித்து கேட்டனர்.

ஆனால் அதிமுக தொண்டர்களோ ஒழுங்காகப் பதிலளிக்காமல் காங்கிரஸ் தொண்டர்களைத் திட்ட ஆரம்பித்தனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் மோசமானவார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். நேரம் செல்லச் செல்ல இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும்சூழ்நிலை உருவானது.

தகவலறிந்த துறைமுகம் போலீசார் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். சென்னை மாநகராட்சிகாங்கிரஸ் கவுன்சிலரான ராயபுரம் மனோ உள்ளிட்ட ஏழு காங்கிரஸ் தொண்டர்களைப் போலீசார் கைது செய்தனர்.

ஆனால் அதிமுக தொண்டர்களைப் போலீசார் ஒன்றுமே செய்யவில்லை.

இந்தச் சம்பவம் துறைமுகம் தொகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X