For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 2 கல்லூரிகளின் மாணவர்கள் கடும் மோதல்: 4 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் நடு ரோட்டில் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.இது தொடர்பாக 4 மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர்.

நந்தனம் கலைக் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த சிலமாணவர்களுக்கும் முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் சென்னையின் மையப் பகுதியான பரபரப்பு மிகுந்த தி. நகரின் வடக்கு உஸ்மான் சாலையில் இருகல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் இன்று காலை திடீரென்று கடுமையாக மோதிக் கொண்டனர்.

ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த மக்கள்பதறியடித்தக் கொண்டு ஓடினர்.

தகவலறிந்து விரைந்து வந்த பாண்டி பஜார் போலீசார் மாணவர்களை விலக்கி விட்டு, அப்பகுதியில் அமைதியைஏற்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக சாந்தகுமார், சண்முகம், நந்தகுமார் மற்றும் விஸ்வாஸ் ஆகிய நான்கு மாணவர்களைப்போலீசார் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X