டாக்டர்களுக்கு அடையாள அட்டைகள்: மருத்துவ கவுன்சில் முடிவு
சென்னை:
தமிழகத்தில் பதிவு பெற்ற டாக்டர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் முடிவுசெய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கவுன்சிலில் பதிவு செய்துள்ள டாக்டர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பதிவாளர், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், வடபழனி, சென்னை என்ற முகவரியில்பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களைப் பெற சுய முகவரியிட்ட கவருடன் ரூ.5க்கான தபால் தலையை இணைத்து அனுப்ப வேண்டும்.அல்லது 4727603 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டும் விண்ணப்பத்தைப் பெறலாம்.
இல்லாவிட்டால் [email protected] என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொண்டும் விண்ணப்பங்களைப் பெறலாம்என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர பல்வேறு புதிய வழிமுறைகளையும் மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.
கவுன்சிலில் பதிவு செய்துள்ள டாக்டர்கள், தங்களது வீடு அல்லது மருத்துவமனை, கிளினிக்கின் முகவரி மாறினால்அது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் தங்களது மருத்துவ பதிவு சான்றிதழ் எண்ணைக் குறிப்பிட்டுகவுன்சிலுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட டாக்டர்கள் பட்டியலில் அவர்களது பெயர் விடுபட நேரிடும்.
கூடுதல் கல்வித் தகுதி பெற்ற டாக்டர்கள் அதற்கான விவரங்களையும் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் கவுன்சிலில்தெரிவிக்க வேண்டும் என்றும் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->