மதுரையில் விபச்சார வேட்டை: 7 பெண்கள், அரசியல்வாதி சிக்கினர்
மதுரை:
மதுரை மாநகர போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் 7 விபச்சார பெண்கள், ஒரு அரசியல்வாதி மற்றும்ஹோட்டல் மேனேஜர் ஆகியோர் சிக்கினர்.
மதுரை போலீஸ் உதவி கமிஷனர் ஹேமா பிரமிளா கருணாகரன் தலைமையிலான போலீஸ் குழு மதுரை நகரில்விபச்சாரத் தடுப்பு வேட்டையில்இறங்கியது.
அப்போது கிடைத்த தகவலின்பேரில் ஒரு குழு விருதுநகருக்கு சென்று சோதனையில் ஈடுபட்டது. இந்த அதிரடிசோதனையில், 7 பெண்கள், முக்கியமான அரசியல்வாதி ஒருவர், 2 ஹோட்டல் மேனேஜர்கள் ஆகியோர் உள்பட17 பேர் பிடிபட்டனர்.
சமீபத்தில் பெங்களூரைச் சேர்ந்த தீபா என்ற பெண் தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். வேலைவாங்கித் தருவதாக கூறி தன்னை ராஜாமணி என்பவர்தான் பெங்களூரிலிருந்து மதுரைக்கு அழைத்து வந்துவிபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர் கூறினார்.
இதையடுத்து மகளிர் அமைப்புகள் போலீஸார் மீது குற்றம் சாட்டின. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி கோர்ட்,மதுரையில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஹேமா கருணாகரன் தலைமையிலான போலீஸ் குழுவுக்கு விபச்சாரத் தடுப்புப் பணிவழங்கப்பட்டது. ஹேமாவுக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில் திருமங்கலம் விரைந்த போலீஸார் அங்குஒரு லாட்ஜில் இருந்த புரோக்கர் ராஜாமணியைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விருதுநகரில் உள்ள முக்கிய ஹோட்டலில் விபச்சாரத்தில்ஈடுபட்டிருந்த பெண்கள் மற்றும் சில வாடிக்கையாளர்களைப் பிடித்தனர்.
அவர்களில் ஒருவர் மதுரை நகரைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளியாவார்.
அதன் பிறகு மதுரை அழகப்பன் நகரில் உள்ள ஒரு பங்களாவில் சோதனை நடந்தது. இதுபோன்ற பல்வேறு சமூகவிரோத செயல்களுக்காகவே அந்த பங்களா பயன்படுத்தப்பட்டு வருவது சோதனையின்போது தெரிய வந்தது.
மொத்தம் 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹேமா கருணாகரன், உதவி கமிஷனராகப் பதவியேற்ற 6 மாதங்களில் நடக்கும் 3-வது விபச்சாரத் தடுப்புவேட்டையாகும் இது. இந்தக் கும்பல்களுக்குத் தலைவன் பெங்களூரில் இருப்பதாகவும், விரைவில் அவன்பிடிபடுவான் என்றும் ஹேமா தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி கோர்ட்டில் ஜாமீன் பெற்று விடுதலையாகி சென்ற தீபா தற்போது மீண்டும் விபச்சாரத்தில்ஈடுபட்டுள்ளதாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளதாக ஹேமா கூறினார்.