25ம் தேதி கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு
டெல்லி:
காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் வரும் 25ம் தேதி நடக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி தான் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் கடைசியாக நடைபெற்றது. அதில்தமிழகத்துக்கு நீர் விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், காவிரி ஆணையத்தை மத்திய அரசு கூட்டவில்லை. ஆணையத்தை விரைவாகக் கூட்டி காவிரிவிவகாரத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடந்த ஒரு மாதத்தில்ஆறு முறை கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால், ஆணையத்தின் மீது நம்பிக்கையே இல்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.
இந் நிலையில் 22ம் தேதிக்குள் காவிரி ஆணையம் கூடவுள்ள தேதி குறித்து தெரிவிக்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து வரும் 25ம் தேதி காவிரி நதிநீர் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நடக்கும் என மத்திய அரசுதெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரிநதி நீர் ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் உரிய நீரைத் நீரைத்திறந்துவிட்டுள்ளதா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும்.
அதன் பிறகு ஒரு அறிக்கை தயாரிக்கப்படும். அந்த அறிக்கை காவிரி நதி நீர் ஆணைையத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் தாக்கல் செய்யப்படும்.
-->