சிறுவன் நரபலி: ராணுவ வீரர் உள்பட 2 பேர் தற்கொலை
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ராணுவ வீரர்தற்கொலை செய்து கொண்டார். அதையறிந்த அவரது மாமனாரும் தற்கொலை செய்து கொண்டார்.
இடையன் விளை கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கடந்த ஆண்டு நரபலி கொடுக்கப்பட்டான்.இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
அவர்களில் பூசாரி மன்னர் பெருமாள், மகேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்.
3-வது நபரான ராணுவ வீரர் வேலாயுதன் பெருமாள் என்பவரையும் போலீஸார் தேடி வந்தனர். ஆனால், அவர்தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இந் நிலையில் வேலாயுதன் பெருமாள் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ஊரின்கன்னியாகுமரி அருகே கிடந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் அதை சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், தனதுமருமகன் தற்கொலை செய்து கொண்டதைக் கண்ட அவரது மாமனார் தங்கம் என்பவரும் தூக்கில் தொங்கித்தற்கொலை செய்து கொண்டார்.
தனது வீட்டிற்குள் சென்ற அவர் அங்கேயே உத்தரத்தில் தூக்கு மாட்டி இறந்தார்.
இந்தச் சம்பவங்கள் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-->