For Daily Alerts
Just In
18 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோவில்
சேலம்:
இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்ததாரமங்கலம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி ஆலயம் திறக்கப்பட்டு, பூஜைகளும் தொடங்கின.
அங்காள பரமேஸ்வரி ஆலய நிர்வாகம் தொடர்பாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து 18ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோவில் மூடப்பட்டது. கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.
தற்போது கோவிலைத் திறந்து பூஜைகளைச் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பிரச்சினக்குரிய இரண்டு பிரிவினருக்கு மத்தியிலும் பேச்சு நடந்தது. அதன் பிறகு ஏற்பட்டஉடன்பாட்டையடுத்து கோவிலைத்திறக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.
கோவில் திறக்கப்பட்டவுடன் பூசாரி நியமிக்கப்பட்டு பூஜைகளும் நடத்தப்பட்டன.
-->
Comments
Story first published: Tuesday, November 19, 2002, 5:30 [IST]