For Quick Alerts
For Daily Alerts
Just In
தண்டவாளத்தில் படுத்த மன நிலை பாதித்த பெண்: மதுரையில் பரபரப்பு
மதுரை:
மதுரையில் மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் ரயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததைத்தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை செல்லூர், வைகை பாலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஒரு பெண் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தார். இதைப் பார்த்த அந்தப் பகுதியைச்சேர்ந்தவர்கள் விரைந்து சென்று அப்பெண்ணை இழுத்துக் காப்பாற்றினார்கள். மயிரிழையில் அப்பெண் உயிர்தப்பினார்.
அவர் யார் என்று விசாரித்தபோது அவர் சரியாகப் பேசவில்லை. இதன் பின்னர் தான் அவர் மன நிலை பாதித்தவர்என்று தெரிந்தது. அவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்று தெரிகிறது.
-->
Comments
Story first published: Tuesday, November 19, 2002, 5:30 [IST]