For Daily Alerts
Just In
வால்பாறை அருகே எஸ்டேட் காவலாளி சுடப்பட்டார்
கோயம்புத்தூர்:
வால்பாறை அருகே முடிஸ் என்ற கேரள எல்லைப் பகுதியில் உள்ள எஸ்டேட்டின் காவலர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
கேரள எல்லைப் பகுதியில் இருந்து நுழைந்த சிலர் எஸ்டேட்டின் வெளிக் கம்பிகளை வெட்டிவிட்டு உள்ளே ஊடுருவினர். இதைப்பார்த்த காவலாளி அவர்களை நோக்கி ஓடினார். அவர்களைப் பிடிக்க முயன்றார்.
அப்போது அந்தக் கும்பல் காவலாளியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டது. இதில் மிக பலத்த காயமடைந்த காவலாளிஅலறலுடன் மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து பிற காவலாளிகள் அங்கே ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட திருட்டுக்கும்பல் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஓடி மறைந்துவிட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-->
Comments
chennai thatstamil kerala women tamilnadu vao tamil news mku civic polls village administrative officer
Story first published: Saturday, November 23, 2002, 5:30 [IST]