கம்யூட்டர் சயின்ஸ் மாணவர்களை குழப்பிய மதுரை பல்கலை.
திண்டுக்கல:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த கம்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்குதவறான கேள்வித் தாள்கள் தரப்பட்டன. இதையடுத்து தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 5வது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில்கம்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு டிஸ்கிரீட் ஸ்டக்சர்ஸ் என்ற பாடத்தின் தேர்வு நடப்பதாக இருந்தது.
ஆனால், தேர்வு மையங்களில் வந்து உட்கார்ந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டிஸ்கிரீட் ஸ்டக்சர்ஸ் பாடத்துக்குசம்பந்தமே இல்லாத கேள்விகள் அந்த கேள்வித் தாளில் இடம் பெற்றிருந்தன. ஒன்று, இரண்டல்ல பெரும்பான்மையானகேள்விகள் வேறு பாடங்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.
இதனால் குழம்பிப் போன மாணவர்கள் தங்கள் கல்லூரிகளின் நிர்வாகத்தினரிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்துபல்கலைக்கழக அதிகாரிகளுக்கு பல்வேறு கல்லூரிகளில் இருந்து தொலைபேசி மற்றும் தந்திகள் மூலம் தகவல் பறந்தது.
அப்போது தான் தவறான கேள்வித் தாள் உருவாக்கப்பட்டது பல்கலைக்கழகத்துக்கே தெரிந்தது. இதையடுத்து அந்தமாணவர்களை திருப்பி அனுப்புமாறும், தேர்வை ஒத்தி வைக்குமாறும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் தகவல் தந்தது.
இதையடுத்து அந்தத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. புதிய கேள்வித்தாள் உருவாக்கப்பட்டு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டபின்னர் மறு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்.
-->