For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு அருகே மலைக் கோவிலில் முருகன் சிலை உடைப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவில் உள்ள கோவிலில் முருகன் சிலை உடைக்கப்பட்டுள்ளது. அதன் தலை உடலில் இருந்துதனியே உடைத்துப் போடப்பட்டுள்ளது.

எலத்தூரை ஒட்டிய மலையின் மீது அமைந்துள்ளது இந்த நாகமலை முருகன் கோவில். இக் கோவிலுக்கு பக்தர்கள் வருவது சமீபகாலத்தில் குறைந்துவிட்டது. இதனால் அறநிலைத் துறை தான் தினமும் ஒரு கால பூஜையை நடத்தி வருகிறது.

இக் கோவிலில் மூலவர் முருகன். கர்ப்பகிரகத்தில் விநாயர் சிலையும் சண்முகர் சிலையும் உள்ளன. இந்தக் கோவிலில் மந்திரிகவுண்டர் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் கூட தினமும் கோவிலுக்குச் செல்வதில்லை என்று தெரிகிறது.

சில நாட்களுக்கு முன் இவர் கோவிலைத் திறந்து பார்த்தபோது மூலவரான முருகப் பெருமானின் சிலை உடைக்கப்பட்டிருந்தது.அதிர்ச்சியடைந்ச பூசாரி உடனே காவல் நிலையத்தில் புகார் தந்தார்.

சிலையின் தலையும் உடல் பகுதியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. தனியே உடைத்து எடுக்கப்பட்ட சிலையின் தலையில்காது பகுதியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது.

கோவிலின் கூரையும் சேதமடைந்துள்ளது. மின் வயர்களும் கூட பிய்த்து எரியப்பட்டுள்ளன.

கோவிலில் கொள்ளை அடிக்க வந்த கும்பல் தான் ஏதும் கிடைக்காத ஆத்திரத்தில் இந்தச் செயலை செய்திருக்க வேண்டும் என்றுகருதப்படுகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் தடயவியல் நிபுணர்களும் கோவிலுக்கு வந்துசோதனை நடத்தினர்.

சேதமடைந்த கோவிலை அறநிலையத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X