For Daily Alerts
Just In
திருச்சியில் ஒரே இரவில் அடுத்தடுத்த 13 கடைகள் உடைப்பு: ரூ. 10 லட்சம் கொள்ளை
திருச்சி:
திருச்சியில் ஒரே இரவில் அடுத்தடுத்துள்ள 13 கடைகளை உடைத்து ரூ. 10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேலப்புதூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், கம்யூட்டர் சாதன கடைகள் என 13 கடைகளின் பூட்டுக்குள்நேற்றிரவு உடைக்கப்பட்டன. கடைகளில் பணம் இருக்கும் பெட்டிகளையும் பீரோக்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தைமட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சுமார் ரூ. 10 லட்சம் பணம் பறிபோயுள்ளது. மற்றபடி கடைகளில் இருந்த எந்தப் பொருளையும் கொள்ளைக் கும்பல்எடுக்கவில்லை.
இச் சம்பவம் திருச்சி வர்த்தகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடியவர்கள் அந்தக் கடைக்காரர்களுக்கு மிகவும் பழக்கமான நபர்களாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
-->
Comments
chennai thatstamil kerala shop women tamilnadu vao robbery tamil news mku civic polls village administrative officer
Story first published: Saturday, November 23, 2002, 5:30 [IST]