வகுப்பறையில் தூக்கில் தொங்கிய மாணவி.. மதுரையில் பரபரப்பு
மதுரை:
மதுரையில் 12ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவி வகுப்பறையிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மானாமதுரை அருகே முத்தனேந்தலைச் சேர்ந்த போஸ் பாண்டி என்பவரின் மகள் ரேவதி (17).
இவர் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹாஸ்டலில் தங்கியிருந்து 12ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றிரவு வழக்கம் போல விடுதி மாணவிகளின் அட்டென்டென்ஸை எடுத்தபோது ரேவதியைக் காணவில்லை. இதையடுத்துஅவரை விடுதிக் கண்காணிப்பாளர், வாட்ச்மேன்கள் மற்றும் மாணவிகள் தேடினர். அப்போது, 10ம் வகுப்பு "பி" பிரிவுஅறையில் ரேவதி தான் போட்டிருந்த சுடிதாரின் துப்பட்டாவிலேயே தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசாருக்கும் ரேவதியின் தந்தை போஸ் பாண்டியனுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது.
தகவல் கேள்விப்பட்டு விரைந்து வந்த மதுரை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ஹரிஹரனும், தெப்பக்குளம்போலீசாரும் ரேவதியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக ஒரு கடிதத்தையும் ரேவதி எழுதி வைத்திருந்தார். அந்தக் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், எனதுகுடும்பத்துக்கு நான் கெட்ட பெயரை வாங்கித் தர விரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு என்ன அர்த்தம், ஏன் அந்த மாணவி இவ்வாறு எழுதினார் என்று தெரியவில்லை.
பின்னர் ரேவதியின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக அனுப்ப ஏற்பாடு செய்தனர். ஆனால் அவருடையசாவுக்குக் காரணம் என்னவென்று தெரியாமல் பிணத்தை எடுக்க விட மாட்டோம் என்றும் உடனடியாக பள்ளிநிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி ரேவதியின் உறவினர்கள் சாலையில் உட்கார்ந்துபோராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இரவுமுழுவதும் இந்தப் போராட்டம் நடந்தது.
அதிகாலையில் இறுதியில் மாவட்ட வருவாய் அதிகாரிகளும் உயர் போலீஸ் அதிகாரிகளும் வந்து ரேவதியின்உறவினர்களுடன் பேச்சு நடத்தி அவர்களைக் கலைந்து போகச் செய்தனர். அதன் பிறகே ரேவதியின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதித்தனர்.
ரேவதியின் தற்கொலை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->