இந்திய- ரஷ்ய தயாரிப்பான பிரம்மாஸ் ஏவுகணை ரெடி
கோயம்புத்தூர்:
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்து வரும் பிரம்மாஸ் அதி நவீன ஏவுகணை 2 ஆண்டுகளில் ராணுவத்தில்சேர்க்கப்பட்டுவிடும் என பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ, இந்திய நதியான பிரம்மபுத்திராவை இணைத்து இந்த ஏவுகணைக்கு பிரம்மாஸ் என்றுபெயரிடப்பட்டுள்ளது. இரு நாடுகளும் இணைந்தே இந்த ஏவுகணைத் தயாரிப்புக்கான நிறுவனத்தையும் அமைத்துள்ளன.
இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் இந்திய பாதுகாப்புத்துறையின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவருமான டாக்டர் சிவதாணுபிள்ளை கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று உரையாற்றினார்.
ஜனாதிபதி அப்துல் கலாமுடன் இணைந்து பல்வேறு ஆயுத தயாரிப்புகளில் ஈடுபட்டவரான பிள்ளை பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
இந்த அதி வேக ஏவுகணை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதையடுத்து இதன் தயாரிப்புப்பணிகள் 2 ஆண்டுகளில் தொடங்கும். இந்த ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
அதே போல 36,000 கி.மீ. உயரத்தில் செயற்கைக் கோள்களை செலுத்தும் திறன் மிக்க அதிக சக்தி கொண்ட ராக்கெட்டுகளைத்தயாரிக்கும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த ராக்கெட்டுக்குத் தேவையான கிரையோஜெனிக் என்ஜின்களைஇஸ்ரோ ஏற்கனவே தயாரித்துவிட்டது.
எதிர்காலத்தில் Micro Electro Mechanical Systems (MEMS) தொழில்நுட்பம் தான் உலகையே ஆளப் போகிறது. விண்வெளிஆராய்ச்சியில் ஆரம்பித்து, மருத்துவத் தொழில்நுப்டம் வரை இந்தத் தொழில்நுட்பம் தான் நீக்கமற நிறையப் போகிறது.
கான்பூரில் உள்ள இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சிப் பிரிவு உலகத் தரம் வாய்ந்த மிகச் சிறிய கார்பன் டியூப்களைத்தயாரித்துள்ளது. இரும்பைவிட 100 மடங்கு அதிக வலு கொண்ட இந்த டியூப்கள் இரும்பை விட 60 மடங்கு எடை குறைந்தவை.இந்தியாவில் திறமைக்கு குறைவேயில்லை என்றாார் பிள்ளை.
-->