ஏரிக் கரையில் கிடந்த வெடிகுண்டு மூட்டைகள்
தருமபுரி:
தருமபுரி காட்டுப் பகுதியில் 5 பெண்கள் உள்பட 25 நக்சலைட்டுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து,தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு ஏரியின் கரையில் மூட்டை மூட்டையாகக் கிடந்த வெடிபொருட்களைப்போலீசார் பறிமுதல் செய்தனர்.
நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் தர்மபுரி மாவட்ட போலீசார் காட்டுக்குள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தனிப்படை போலீசார் ஊத்தங்கரை, சென்ராயன்மலை, குரக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வளைத்து தேடுதல்வேட்டையில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். 4வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தேவராஜன் ஏரியில் சில ஐயப்ப பக்தர்கள் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த ஏரியின் கரையில் உள்ள ஒரு பாறையின் மேல் 13 மூட்டைகள் இருந்தன. அவற்றின் அருகேசென்றபோது வெடிபொருட்கள் வாசனை அடித்தது.
இதையடுத்து அவர்கள் போலீசாருக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்துவந்து அந்த மூட்டைகளைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது அதில் ஏராளமான வெடிபொருட்கள் இருந்தன.
ஆனால், அவை எந்த வகையான வெடிபொருட்கள் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.இதையடுத்து சிவசாசி மற்றும் சென்னையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பிடிபட்ட நக்சலைட்டு கும்பலுக்கும் இந்த வெடிபொருட்களுக்கும் சம்பந்தம் உண்டா என்பது குறித்தும்போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-->