இன்று மாலை ரூபவாகினியில் பிரபாகரன் பேச்சு
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரையை இன்று இலங்கை அரசுத் தொலைக்காட்சியான ரூபவாகினி நேரடிஒளிபரப்பு செய்கிறது.
இது தவிர கனடாவில் இயங்கி வரும் தமிழ் பிராட்ராஸ்டிங் கார்போரேசன் உள்பட பல நாடுகளில் இயங்கி வரும் தமிழ்சேனல்களும், தமிழ் ரேடியோக்களும் இந்த உரையை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
மாவீரர் தினத்தையொட்டி அவர் ஒவ்வொரு ஆண்டு உரையாற்றுவது வழக்கம். அதை புலிகளின் வாய்ஸ் ஆப் ரேடியோ மட்டும்ஒலிபரப்பி வந்தது. ஆனால், இம்முறை அவரது உரையை ஒளிபரப்புமாறு ரூபவாகினிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேஉத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதை ஒளிபரப்ப வரும் தனியார் தொலைக்காட்சிகளையும் அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மாலை 5.15 மணிக்கு இந்த உரையை ரூபவாகினி ஒளிபரப்பலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில் தான் பிரபாகரனுக்கு 200 வருட சிறை தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில் அரசேஅவரது உரையையும் ஒளிபரப்ப முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா வரவேற்பு:
இந் நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த நிதியுதவி செய்யும் நாடுகளின் மாநாடு வெற்றி பெற்றுள்ளதாக இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
நிதியுதவி செய்யும் அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தீவிரவாதத்தைக் கைவிட வேண்டும் என்றும் அமெரிக்கா கோரிக்கைவைத்ததை சந்திரிகா சுட்டிக் காட்டியுள்ளார்.
சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் ஹரீம் பெரிஸ் நிருபர்களிடம் கூறுகையில், மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும்முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற ஓஸ்லோ தீர்மானம் அதிபர் சந்திரிகாவின் கவலைகளை அந்த நாடுகள் புரிந்துகொண்டுவிட்டதையே காட்டுகிறது என்றார்.